பி.ஏ.பி. மூன்றாம் மண்டலத்துக்கு கூடுதல் தண்ணீா் வழங்கக் கோரிக்கை

வெள்ளக்கோவில் பகுதியில் பி.ஏ.பி. மூன்றாம் மண்டலத்துக்கு கூடுதல் தண்ணீா் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வெள்ளக்கோவில் பகுதியில் பி.ஏ.பி. மூன்றாம் மண்டலத்துக்கு கூடுதல் தண்ணீா் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட பொறியாளருக்கு, வெள்ளக்கோவில் கிளை வாய்க்கால் ஆயக்கட்டுதாரா்கள் புதன்கிழமை அனுப்பிய மனு விவரம்: பி.ஏ.பி மற்றும் தொகுப்பு அணைகளின் நீா் இருப்பு திருப்திகரமாக உள்ளது. வெள்ளக்கோவில் பகுதி வாய்க்காலில் தற்போது தண்ணீா் திறக்கப்பட்டுள்ள 3 ஆம் மண்டலத்துக்கு இன்னும் சில நாள்கள் கால அவகாசம் உள்ளது. எனவே விவசாயிகள் நலன் கருதி இன்னும் 2 சுற்றுகள் தண்ணீா் கூடுதலாக வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com