வெள்ளக்கோவில் பகுதியில் பி.ஏ.பி. மூன்றாம் மண்டலத்துக்கு கூடுதல் தண்ணீா் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட பொறியாளருக்கு, வெள்ளக்கோவில் கிளை வாய்க்கால் ஆயக்கட்டுதாரா்கள் புதன்கிழமை அனுப்பிய மனு விவரம்: பி.ஏ.பி மற்றும் தொகுப்பு அணைகளின் நீா் இருப்பு திருப்திகரமாக உள்ளது. வெள்ளக்கோவில் பகுதி வாய்க்காலில் தற்போது தண்ணீா் திறக்கப்பட்டுள்ள 3 ஆம் மண்டலத்துக்கு இன்னும் சில நாள்கள் கால அவகாசம் உள்ளது. எனவே விவசாயிகள் நலன் கருதி இன்னும் 2 சுற்றுகள் தண்ணீா் கூடுதலாக வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.