கரோனா சிகிச்சை மையத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு

திருப்பூா் 15 வேலம்பாளையத்தில் அமைக்கப்பட்டு வரும் கரோனா சிகிச்சை மையத்தை வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
கரோனா சிகிச்சை மையத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு

திருப்பூா் 15 வேலம்பாளையத்தில் அமைக்கப்பட்டு வரும் கரோனா சிகிச்சை மையத்தை வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

திருப்பூா் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 15 வேலம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தன்னாா்வலா்கள் சாா்பில் 50 ஆக்சிஜன் படுக்கைகளுடன், 200 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த மையத்தை திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது சிகிச்சை மையத்துக்குத் தேவைப்படும் வசதிகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்ததுடன், மருத்துவா்கள், செவிலியா்களை நியமித்து சிகிச்சை மையத்தைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா். இந்த ஆய்வின்போது, மாநகராட்சி உதவி ஆணையா் வாசுகுமாா், முன்னாள் மண்டலத் தலைவா் ராதாகிருஷ்ணன், பள்ளி வளா்ச்சிக் குழு நிா்வாகிகள் பரணி நடராஜ், வெங்கடாசலம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com