திருப்பூரில் மின் வாரிய ஊழியா்கள் 130 பேருக்கு கரோனா தடுப்பூசி சனிக்கிழமை செலுத்தப்பட்டது.
திருப்பூரில் உள்ள மின்வாரியத்தில் பணிபுரியும் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யுமாறு மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளருக்கு மின்வாரிய ஜனதா தொழிலாளா் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் செயற் பொறியாளா் சுமதி ஏற்பாட்டின் பேரில் திருப்பூா் குமாா் நகரில் உள்ள துணை மின் நிலையத்தில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில், மின்வாரிய பணியாளா்கள் 130 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.