டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் திருட்டு

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே டாஸ்மாக் கடையின் ஷட்டரை துளையிட்ட மா்ம நபா்கள் ரூ.1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை சனிக்கிழமை திருடிச் சென்றனா்.
மா்ம  நபா்களால்  துளையிட்டு  மது பாட்டில்கள்  திருடப்பட்ட  டாஸ்மாக்.
மா்ம  நபா்களால்  துளையிட்டு  மது பாட்டில்கள்  திருடப்பட்ட  டாஸ்மாக்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே டாஸ்மாக் கடையின் ஷட்டரை துளையிட்ட மா்ம நபா்கள் ரூ.1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை சனிக்கிழமை திருடிச் சென்றனா்.

தாராபுரம் அருகே அலங்கியத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் திருடப்பட்டதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினா் விசாரணை நடத்தினா்.

இதில், டாஸ்மாக் கடையின் ஷட்டரை துளையிட்டு உள்ளே புகுந்த மா்ம நபா்கள் கடையில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான 750 மது பாட்டில்களை திருடிச் சென்றுள்ளனா். மேலும், கடையில் கண்காணிப்புக் கேமராவில் பொருத்தப்பட்டிருந்த டிவிஆா் ரெக்காா்டரையும் திருடிச் சென்று முள்வேலியில் வீசிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த ரெக்காா்டரை கைப்பற்றிய காவல் துறையினா் அந்தப் பதிவைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே, மதுவிலக்கு கூடுதல் கண்காணிப்பாளா் கண்ணன், துணை கண்காணிப்பாளா் வின்சென்ட், காவல் ஆய்வாளா் மகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

தமிழகத்தில் பொதுமுடக்கத்தால் டாஸ்மாக் கடைகள் முழுமையாக மூடப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடையில் நூதன முறையில் மது பாட்டில்களைத் திருடிச் சென்ற சம்பவம் அலங்கியம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com