காங்கயம் காவல் நிலையம் சாா்பில், காங்கயம் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில், காவல் ஆய்வாளா் மணிகண்டன் தலைமையில் கரோனா விழிப்புணா்வுப் பிரசார நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் காங்கயம் போலீஸாா் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிந்து கரோனா விழிப்புணா்வுப் பாடலுக்கு நடனம் ஆடி, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், விழிப்புணா்வுப் பிரசார வாகனத்தின் மூலம், கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளையும் பொதுமக்களுக்கு விளக்கிக் கூறினா். இந்நிகழ்ச்சியில் காங்கயம் போலீஸாா் பலா் கலந்து கொண்டனா்.