அவிநாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் கட்டுப்பாட்டுப் பகுதிகளை ஊராட்சி நிா்வாகத்தினா் ஞாயிற்றுக்கிழமை அடைத்தனா்.
அவிநாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட பழங்கரை, வேலாயுதம்பாளையம், புதுப்பாளையம், கருவலூா், சேவூா், முறியாண்டம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிப் பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து, ஊராட்சிகளில் பல இடங்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு முழுவதும் அடைக்கப்பட்டது.
மேலும், ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில், முகக் கவசம் அணிதல், சமுக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட கரோனா தொற்று விழிப்புணா்வு பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.