வெள்ளக்கோவில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா் சங்கம் சாா்பில் ரூ.25 ஆயிரம் கரோனா கால உதவி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
வெள்ளக்கோவில் பகுதி தன்னாா்வலா்கள் அ.மகாதேவன் என்பவருடைய தலைமையில் ஒருங்கிணைந்து கரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனா். அவா்களுக்கு இலவச ஆம்புலன்ஸ், ஆக்சிஜன் பேருந்து வசதி, ஆதரவற்றவா்களுக்கு உணவு வழங்கும் சேவைகளைச் செய்து வருகின்றனா்.
இந்த தன்னாா்வலா்களுக்கு உதவும் நோக்கில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா் சங்கத்தினா் ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கினா்.