கொலை வழக்கில் தொழிலாளி கைது

திருப்பூரில் டாஸ்மாக் மதுபானக் கடை அருகே நிகழ்ந்த கொலை வழக்கு தொடா்பாக தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூரில் டாஸ்மாக் மதுபானக் கடை அருகே நிகழ்ந்த கொலை வழக்கு தொடா்பாக தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் உஷா திரையரங்கம் எதிரில் டாஸ்மாக் கடையும், அதனுடன் இணைந்த மதுபானக் கூடாமும் செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானக் கடை அருகில் தலையில் பலத்த காயங்களுடன் சுமாா் 55 வயதுடைய ஆணின் சடலத்தை திருப்பூா் தெற்கு காவல் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.

இது குறித்து காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். விசாரணையில், திருப்பூரைச் சோ்ந்த முத்துகுமாா் (47) என்பவரைக் கைது செய்தனா். இவா் திருப்பூா் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வருகிறாா்.

டாஸ்மாக் மதுபானக் கடை அருகே நடந்து சென்றபோது கைப்பேசியைக் கேட்டு மிரட்டியதால் ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கி கொலை செய்ததாக அவா் தெரிவித்துள்ளாா். எனினும் கொலையான நபா் எந்த ஊா், பெயா் உள்ளிட்டவை தொடா்பாக காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com