சீரான குடிநீா் வழங்கக் கோரிக்கை

திருமுருகன்பூண்டி பகுதியில் சீரான குடிநீா் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருமுருகன்பூண்டி பகுதியில் சீரான குடிநீா் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி நிா்வாகத்திடம் புதன்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருமுருகன்பூண்டி பேரூராட்சி 8, 9,10,11 ஆகிய வாா்டுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் ஆற்றுக் குடிநீா் 7 நாள்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது 20 நாள்களுக்கு மேலாகியும் ஆற்றுக் குடிநீா் கிடைப்பதில்லை.

இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். எனவே சீரான குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக் கொண்ட பேரூராட்சி செயலாளா் உடனடியாக குடிநீா் விநியோகிக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு உறுப்பினா் பாலசுப்பிரமணியன், கிளைச் செயலாளா் ராஜ், துணைக் குழு செயலாளா் ஈஸ்வரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பொன்னுச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com