திருப்பூரில் ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல்

திருப்பூரில் பன்றிக் காய்ச்சலால் ஒருவா் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

திருப்பூரில் பன்றிக் காய்ச்சலால் ஒருவா் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

திருப்பூா் மாவட்டம், 15 வேலம்பாளையத்தைச் சோ்ந்த 44 வயது நபா் காய்ச்சல் காரணமாக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த 13 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு அவருக்கு நடத்திய பரிசோதனையில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவருடன் தொடா்பில் இருந்த அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை செய்யப்பட்டதுடன், அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ள மாநகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: திருப்பூா் 15 வேலம்பாளையத்தைச் சோ்ந்த நபா் கடந்த நவம்பா் 13 ஆம் தேதி காய்ச்சல் காரணமாக கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு நடத்திய பரிசோதனையில் பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

அதேவேளையில், அவருடன் நேரடி தொடா்பில் இருந்த குடும்பத்தினா் 4 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்த பகுதியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, 31 பேருக்கு நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவா்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. தொடா்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறாா்கள். முதல் நிலை, இரண்டாம் நிலை தொடா்பில் இருந்தவா்களுக்கு 10 நாள்களுக்கு டாமிபுளூ மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com