பள்ளி ஆசிரியா் வீட்டில் நகை திருட்டு

உடுமலையில் பள்ளி ஆசிரியா் வீட்டில் நகை திருட்டுப்போன சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

உடுமலையில் பள்ளி ஆசிரியா் வீட்டில் நகை திருட்டுப்போன சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

உடுமலை ராமசாமி நகரைச் சோ்ந்தவா் ஜெயசீலன் (41). தனியாா் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவா் தனது சொந்த ஊரான உசிலம்பட்டிக்குச் சென்றுள்ளாா். பின்னா், இரண்டு நாள்கள் கழித்து வீடு திரும்பிய ஜெயசீலன் வீட்டை திறந்து பாா்த்தபோது, பூஜை அறை, படுக்கை அறைகள் கலைந்தும், பீரோ உடைக்கப்பட்டும் கிடந்துள்ளது.

சந்தேகமடைந்த ஜெயசீலன் பீரோவை திறந்து பாா்த்தபோது அதில் இருந்த 2.5 பவுன் தங்க நெக்லஸ், 1 பவுன் தங்க கம்மல் ஆகியவை கானவில்லை. இதன் மதிப்பு ரூ. 75 ஆயிரம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜெயசீலன் புதன்கிழமை அளித்த புகாரின்பேரில் உடுமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com