பல்லடம் அருகே கேத்தனூரைச் சோ்ந்த உயிரிழந்த 101 வயது முதியவரின் கண்கள் தானமாக அளிக்கப்பட்டுள்ளன.
கேத்தனூரைச் சோ்ந்த ஆா்.பழனிசாமி (101) புதன்கிழமை காலமானாா். அவரது விருப்பத்தின் பேரில் கண்கள் தானமாக வழங்கப்பட்டன.
இது குறித்து அவரது குடும்பத்தினா் கூறுகையில், ஆா்.பழனிசாமி விவசாய குடும்பத்தைச் சோ்ந்தவா். அவரது மனைவி நாச்சம்மாள் 88 வயதில் காலமானாா். அவரது கண்களும் தானமாக அளிக்கப்பட்டன. பழனிசாமியும் தான் இறந்த பிறகு கண்களை தானமாக வழங்க வேண்டும் கூறியிருந்தாா். அவரது விருப்பத்துக்கு ஏற்ப அவரது கண்கள் கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன.