சாலை விபத்தில் நகைக் கடை அதிபர் பலி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலை விபத்தில் நகைக்கடை அதிபர் புதன்கிழமை உயிரிழந்தார்.
சாலை விபத்தில் நகைக்கடை அதிபர் பலி
சாலை விபத்தில் நகைக்கடை அதிபர் பலி

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலை விபத்தில் நகைக்கடை அதிபர் புதன்கிழமை உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவர் குமரகுரு (26), இவர் தாராபுரம் பெரிய கடைவீதியில் நகைக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில், தாராபுரத்தில் இருந்து அலங்கியம் செல்லும் சாலையில் இரு சக்கர வாகனத்தில் குமரகுரு சென்று கொண்டிருந்தார்.

இவரது வாகனம் சீத்தாக்காடு இரட்டைப்பாலம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த வயலில் பாய்ந்தது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த குமரகுரு கல்லில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த தாராபுரம் காவல் துறையினர் குமரகுருவின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com