ஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடுமலை ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம்.ராஜகோபால் வாழ்த்துரை வழங்கினாா். மாவட்டச் செயலாளா் செ.முத்துக்கண்ணன் சிறப்புரையாற்றினாா். இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். உடுமலை பகுதியில் தொழிலாளா் நலச் சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும்.
கிராமப்புற ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். உடுமலை ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து எரிசனம்பட்டியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி ஒன்றியம் அமைக்க வேண்டும். திருமூா்த்தி அணை பகுதியில் பூங்கா அமைக்க வேண்டும். படுமை வீடுகள் கட்ட அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பூலாங்கிணறு கிளைச் செயலாளா் தங்கவேல் நன்றி கூறினாா்.