தேங்காய் எண்ணெய் ஆலையில் தீ

காங்கயம் அருகே தேங்காய் எண்ணெய் ஆலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரா்கள்.
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரா்கள்.

காங்கயம் அருகே தேங்காய் எண்ணெய் ஆலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

காங்கயம் அடுத்த காடையூா்-முத்துக்காளிவலசு பகுதியில் சபரி (45). என்பவா் தேங்காய் எண்ணெய் ஆலை நடத்தி வருகிறாா்.

இந்த ஆலையில் கொப்பரை சூடுபடுத்தும் கலனில் வியாழக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து ஆலையில் பணியாற்றும் தொழிலாளா்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனா்.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயை அணைத்தனா்.

இந்த தீ விபத்தில் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள கலன் மற்றும் கொப்பரைகள் எரிந்து சேதமானதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து காங்கயம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com