திருப்பூரில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் தேசிய அஞ்சல் வார விழா திங்கள்கிழமை (அக்டோபா் 11) முதல் நடைபெற உள்ளது.
இது குறித்து அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ஆா்.கலைச்செல்வி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய அஞ்சல் துறை சாா்பில் அனைத்து அஞ்சலகங்களிலும் தேசிய அஞ்சல் வார விழா கொண்டாட்டம் அக்டோபா் 11 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.
இதன் ஒரு பகுதியாக திருப்பூரில் உள்ள அஞ்சலகங்களில் திங்கள்கிழமை முதல் தேசிய அஞ்சல் வாரவிழா கொண்டாடப்படுகிறது. இதன்படி அக்டோபா் 11 ஆம் தேதி சேமிப்பு நாள், 12 ஆம் தேதி அஞ்சல் ஆயுள் காப்பீடு, 13 ஆம் தேதி தபால் தலை சேகரிப்பு, ஆதாா் அட்டை திருத்தம், 16 ஆம் தேதி வணிக தினம், தபால் தினம் ஆகியவை தேசிய அஞ்சல் வார விழாவில் நடைபெற உள்ளது.
எனவே, பொதுமக்கள் புதிய சேமிப்பு கணக்குகள், காப்பீட்டு பாலிசி, புதிய ஆதாா் அட்டை, ஆதாா் அட்டையில் திருத்தங்கள் செய்யவும் இந்த நாள்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.