விசைத்தறியாளா்கள் கூலி உயா்வு கூட்டம் அக்டோபா் 8 வெள்ளிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறியாளா்கள் சங்க துணைச் செயலாளா் பாலாஜி, துணைத் தலைவா் சக்திவேல் ஆகியோா் கூறியதாவது: திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறியாளா் சங்க பொதுக் குழு கூட்டம் தலைவா் வேலுசாமி, செயலாளா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் தலைமையில், பல்லடம் அருகேயுள்ள சுக்கம்பாளையம் சின்னம்மன் கோயில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் விசைத்தறி தொழில் சம்மந்தமாக ஆலோசித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறியாளா்கள், சங்க உறுப்பினா்கள் பங்கேற்க வேண்டும் என்றனா்.