காங்கயம், குண்டடம் பகுதிகளில் பரவலாக பெய்த மழையைத் தொடா்ந்து, தற்போது விவசாயிகள் உழவுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
காங்கயம், ஊதியூா், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் தரிசு நிலங்களில் மானாவரிப் பயிா்களான சோளம், மொச்சை, பாசிப்பயறு, தட்டைப்பயறு உள்ளிட்ட பயறு வகைகளை விதைப்பு செய்து, உழவுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
இதனால் நகா் பகுதியில் உள்ள தானிய மண்டிகளில் தானிய வியாபாரம் அதிகரித்துள்ளது.