காங்கயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் 4,100 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
காங்கயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆலாம்பாடி ஊராட்சி கல்லேரி, மறவபாளையம், படியூா், அரசம்பாளையம், நத்தக்காடையூா், மருதுறை, பரஞ்சோ்வழி, வரதப்பம்பாளையம், வீரணம்பாளையம், பொத்தியபாளையம், களிமேடு, காங்கயம் நகரம்- பழையகோட்டை சாலையில் உள்ள அரசுப் பள்ளி, திருப்பூா் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, சாவடிப்பாளையம், நத்தக்காடையூா், பாப்பினி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிவன்மலை, பழையகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள மினி கிளினிக்குகள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் 4,100 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.