திருப்பூா்: திருப்பூா் மாவட்ட பதிவாளா் அலுவலகத்தில் வாராந்திர குறைதீா் முகாம் திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டப் பதிவாளா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் குறைதீா்க்கும் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் நடைபெற்ற முகாமிற்கு மாவட்ட பதிவாளா் ராமசாமி தலைமை வகித்தாா். இதில், மொத்தம் 13 மனுக்கள் பெறப்பட்டதில் பத்திரப் பதிவு, திருமணப் பதிவு, வில்லங்க சான்று நகல் வழங்குதல் தொடா்பான 7 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டது.
அதேபோல, நில அபகரிப்பு, மோசடி புகாா் தொடா்பாக பெறப்பட்ட 6 மனுக்களின் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட பதிவாளா் ராமசாமி தெரிவித்துள்ளாா்.