அவிநாசி: அவிநாசி அருகே கருவலூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் முருகன் வெற்றி பெற்றார்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில்,
மொத்த வாக்குகள்: 5123 பதிவானைவை : 3422
வாக்கு விபரம்:
1.முருகன் -1571- திமுக
2.மூர்த்தி (எ) முருகேசன் - 1337
3.அரவிந்தன் - 327- சுயேட்சை
4.ரங்கசாமி - 145 - சுயேட்சை
செல்லாதவை - 42
வாக்கு வித்தியாசம்- 234