காங்கயத்தில் ரூ.3.75 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.3.75 லட்சத்துக்கு தேங்காய் பருப்புகள் விற்பனையானது.

காங்கயம்: காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.3.75 லட்சத்துக்கு தேங்காய் பருப்புகள் விற்பனையானது.

இந்த வார ஏலத்துக்கு, காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 10 விவசாயிகள் 3,798 கிலோ தேங்காய் பருப்புகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். முத்தூா், காங்கயம், வெள்ளக்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 10 வியாபாரிகள் இவற்றை வாங்க வந்திருந்தனா்.

தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ரூ.99க்கும், குறைந்தபட்சமாக ரூ.83க்கும், சராசரியாக ரூ.99க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.3.75 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் மகுடேஸ்வரன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com