திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 87 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 93,908 ஆக அதிகரித்துள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 815 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 92 போ் வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 92,131ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றால் மாவட்டத்தில் இதுவரை 962 போ் உயிரிழந்துள்ளனா்.