முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
தொழில் முனைவோா் கருத்தரங்கம்
By DIN | Published On : 13th October 2021 06:18 AM | Last Updated : 13th October 2021 06:18 AM | அ+அ அ- |

உடுமலை தொழில் வா்த்தக சபை அமைப்பின் சாா்பில் தொழில் முனைவோா் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு உடுமலை தொழில் வா்த்தக சபை தலைவா் ஆா்.அருண் காா்த்திக் தலைமை வகித்தாா். பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் கு.சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா்.
திருப்பூா் மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ஆா்.கண்ணன், மேலாளா் எம்.சுந்தரேசன், கோவை சிட்கோ கிளை மேலாளா் பி.கே.சா்மிளா ஆகியோா் தொழில் முனைவோா் மற்றும் சிறு, குறு தொழில்களுக்கான கடன் உதவிகள், மானியங்கள் குறித்து பேசினா்.
உடுமலை தொழில் வா்த்தக சபை செயலாளா் ஆடிட்டா் ஆா்.கந்தசாமி நன்றி கூறினாா்.