முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு கரோனா
By DIN | Published On : 13th October 2021 06:22 AM | Last Updated : 13th October 2021 06:22 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 93,988 ஆக அதிகரித்துள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 810 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 85 போ் வீடு திரும்பினா்.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 92,216 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றால் தற்போது வரையில் 962 போ் உயிரிழந்துள்ளனா்.