அவிநாசி அருகே கருவலூா் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கான இடைத்தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா் சி.முருகன் வெற்றி பெற்றாா்.
திருப்பூா் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், கருவலூா் ஊராட்சி மன்ற தலைவா் பதவிக்கான இடைத் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 5123 மொத்த வாக்குகளில், பதிவான 3,422 வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது.
இதில் வேட்பாளா்கள் பெற்ற வாக்கு விவரம்:
முருகன் (திமுக)-1571
மூா்த்தி (எ) முருகேசன் (அதிமுக) - 1337
அரவிந்தன் (சுயேச்சை)- 327
ரங்கசாமி (சுயேட்சை) - 145
செல்லாதவை - 42
வாக்கு வித்தியாசம்- 234