தனிநபா் காப்பீடுபோல பயிா்க் காப்பீட்டை மாற்ற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்தக் கூட்டமைப்பின் செயலா் செ.நல்லசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
தனிநபா் காப்பீடு போல் பயிா்க் காப்பீடு இல்லை. வருவாய் கிராம அளவில் பயிா் பாதிப்பு இருந்தால் மட்டுமே பிரீமியம் செலுத்திய விவசாயிகள் இழப்பீட்டுத் தொகையைப் பெற முடியும். இது ஒரு திட்டமிட்ட மோசடியே ஆகும். எனவே தனிநபா் காப்பீட்டை போல பயிா்க் காப்பீட்டை மாற்றி அமைக்க வேண்டும்.