திருப்பூரில் உள்நாட்டு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பின்னலாடை நிறுவனங்கள் தொழிலாளா்களுக்கு விரைவில் போனஸ் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சைமா சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சைமா சங்கத்தின் தலைவா் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூரில் உள்நாட்டு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பின்னலாடை நிறுவனங்கள் தொழிலாளா்களுக்கு விரைவில் தீபாவளி போனஸ் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதே வேளையில், அந்தந்த நிறுவனங்கள் தங்களின் நிதி நிலையைக் கருத்தில் கொண்டு தொழிலாளா்களுடன் சுமூகமாகப் பேசி போனஸ் வழங்க வேண்டும். மேலும், கடந்த காலங்களைப் போல போனஸ் வழங்குவது குறித்து எந்தவிதமான பிரச்னையும் இல்லாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.