பல்லடம் அருகேயுள்ள சின்னக்கரையில் தனியாா் பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா் பிப்ரா நாயக் மகன் கேத்ரா நாயக் (20). இவா், பல்லடம் அருகேயுள்ள சின்னக்கரையில் வாடகை வீட்டில் வசித்து கொண்டு அப்பகுதியில் கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். இவா், குன்னாங்கல்பாளையம் பிரிவு பகுதியில் திங்கள்கிழமை இரவு நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக திருப்பூரிலிருந்து பல்லடம் நோக்கி வந்த தனியாா் பேருந்து, கேத்ரா நாயக் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.