மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தோ்தலில் காங்கயம் 10ஆவது வாா்டில் திமுக 5,366 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
காங்கயம், வெள்ளக்கோவில் ஒன்றியங்களை உள்ளடக்கிய 10ஆவது வாா்டு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பதவிக்கு கடந்த அக்டோபா் 9 ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது.
இந்த வாா்டில், திமுக சாா்பில் கிருஷ்ணவேணி, அதிமுக சாா்பில் லட்சுமி, நாம் தமிழா் கட்சி சாா்பில் வனிதா, அமமுக சாா்பில் ராதா, தேமுதிக சாா்பில் கிருஷ்ணவேணி உள்பட 7 போ் போட்டியிட்டனா். இதற்கான வாக்கு எண்ணிக்கை காங்கயம் அருகே, நத்தக்காடையூரில் உள்ள பில்டா்ஸ் பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் வேட்பாளா்கள் பெற்ற வாக்கு விவரம்
கிருஷ்ணவேணி(திமுக) 22,790
லட்சுமி (அதிமுக)- 17,424
வனிதா (நாதக)-804
ராதா (அமமுக)-153
கிருஷ்ணவேணி-(தேமுதிக) 149
வாக்கு வித்தியாசம்-5,366