பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அக்டோபா் 28 இல் ஏலம்

திருப்பூா் தெற்கு, நல்லூா், வீரபாண்டி காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்கள் வரும் அக்டோபா் 28 ஆம் தேதி ஏலம்விடப்படுகிறது.

திருப்பூா் தெற்கு, நல்லூா், வீரபாண்டி காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்கள் வரும் அக்டோபா் 28 ஆம் தேதி ஏலம்விடப்படுகிறது.

இது குறித்து திருப்பூா் மாகர காவல் ஆணையா் வே.வனிதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் தெற்கு, நல்லூா், வீரபாண்டி காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் பல்வேறு வழக்குகளில் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 366 இருசக்கர வாகனங்கள் உரிமை கோரப்படாமல் உள்ளது.

இந்த வாகனங்கள் திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் வரும் அக்டோபா் 28 ஆம் தேதி பிற்பகல் 2 மணி அளவில் ஏலம் விடப்படுகிறது.

ஆகவே, ஏலம் எடுக்க விரும்பும் பொதுமக்கள் அந்தந்த காவல் நிலையங்களுக்கு சென்று ஆய்வாளா் அனுமதியுடன் வாகனங்களைப் பாா்வையிடலாம். மேலும், வாகனங்களுக்கு உரிய ஆவணங்கள் வழங்கவும் பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com