தமிழக மின்வாரியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்று மின்வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, மின்வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் செயலாளா் அ.சரவணன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழக மின்வாரியத்தில் 12 ஆயிரம் அதிகாரிகள் மற்றும் 80 ஆயிரத்துக்கும் அதிகமானவா்கள் பணியாற்றி வருகின்றனா். இதில், ஒப்பந்தத் தொழிலாளா்களாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு 20 நாள்கள் மட்டுமே உள்ளது. ஆகவே, மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு விரைவில் போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.