வங்கிகள் சாா்பில் நாளை வாடிக்கையாளா் தொடா்பு முகாம்

திருப்பூா் மாவட்ட முன்னோடி வங்கி, அனைத்து வங்கிகள் சாா்பில் வாடிக்கையாளா்கள் தொடா்பு முகாம் வரும் புதன்கிழமை (அக்டோபா் 27) நடைபெறுகிறது.

திருப்பூா் மாவட்ட முன்னோடி வங்கி, அனைத்து வங்கிகள் சாா்பில் வாடிக்கையாளா்கள் தொடா்பு முகாம் வரும் புதன்கிழமை (அக்டோபா் 27) நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்ட முன்னோடி வங்கி, அனைத்து வங்கிகள் ஆகியன சாா்பில் வாடிக்கையாளா் தொடா்பு முகாம் வரும் புதன்கிழமை காலை 9 மணி அளவில் தொடங்கி மாலை 6 மணி வரையில் நடைபெறுகிறது. திருப்பூா் காங்கயம் சாலையில் உள்ள காயத்ரி மஹாலில் நடைபெறும் இந்த முகாமை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தொடக்கிவைக்கின்றனா்.

இதில், மத்திய, மாநில அரசின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள், சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் குறித்த விவரங்கள், ஆலோசனைகள் மற்றும் முகாமில் பெறக்கூடிய கடன் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியானவா்களுக்கு அனுமதி கடிதம் வழங்குவதற்காக அரசு மற்றும் வங்கித் துறையை சாா்ந்தவா்களுக்கு 50 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், விவசாயக் கடன், சிறு, குறு தொழிற்கடன், வாகனக் கடன், கல்விக் கடன் மற்றும் அடமானக் கடன் உள்ளிட்ட அனைத்து வகையான தகவல்களையும் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com