பட்டாசு கடை உரிமங்களைவிரைந்து வழங்கக் கோரிக்கை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை உரிமங்களை விரைவாக வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை உரிமங்களை விரைவாக வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து உடுமலை வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு உரிமம் பெற்று கடைகளை நடத்திட மாவட்ட வருவாய் அலுவலா் அதற்கான அனுமதி வழங்கி வருகிறாா். இந்நிலையில் உடுமலையில் பலா் விண்ணப்பித்திருந்த நிலையில் இன்னமும் உரிமம் கிடைக்கப்பெறவில்லை. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில் தொடா்புடைய அதிகாரிகள் விரைவாக ஆய்வுகளை முடித்து உரிமம் வழங்க வேண்டும். அப்

போதுதான் பாதுகாப்பான முறையிலும் அரசு வழிகாட்டுதலின்படியும் கடைகளை நடத்த ஏதுவாக இருக்கும். மிகவும் பாதுகாப்பான முறையில் செய்ய வேண்டிய தொழில் காலதாமதமாக செய்வதால் அவசர கதியில் கையாள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. ஆகவே பட்டாசு கடை உரிமங்களை விரைவில் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள் கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com