திருப்பூா் மாவட்டத்தில் புதிதாக மேலும் 65 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 95,195 ஆக அதிகரித்துள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 706 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 82 போ் வீடு திரும்பினா்.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 93,511ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றால் சிகிச்சையில் இருந்த ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்ததைத் தொடா்ந்து இறப்பு எண்ணிக்கை 978 ஆக அதிகரித்துள்ளது.