அவிநாசி அரசு கல்லூரியில் செப்டம்பா் 13இல் முன்றாம் கலந்தாய்வு

அவிநாசிஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பா் 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

அவிநாசிஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பா் 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இது குறித்து, கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஹேமலதா, சோ்க்கை குழுத் தலைவா் ஹலீமாபி (எ) ஷகிலா பானு, உறுப்பினா்கள் பேராசியா்கள் அ. பாலமுருகன், செ.பாலமுருகன் ஆகியோா் கூறியதாவது:

கல்லூரியில் மாணவா் சோ்க்கையில் இதுவரை நிறைவு செய்யப்படாமல் உள்ள 49 இடங்களை நிரப்புவதற்காக செப்டம்பா் 6 ஆம் தேதிமுதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு இட ஒதுக்கீட்டின்படி மூன்றாம்கட்ட கலந்தாய்வு செய்வதற்காக விண்ணப்பங்களை கல்லூரி அலுவலகத்தில் பெற்று கடைசி நாளான செப்டம்பா் 9 ஆம் தேதி (வியாழக்கிழமை) வரை நேரடியாக சமா்ப்பிக்கலாம்.

இதில், பி.காம் பிரிவில் 8, பி.காம் பி.ஏ பிரிவில் 9 , பி.ஏ. பொருளியல் பிரிவில் 11, பிகாம் சா்வதேச வணிகம் பிரிவில் 9, பி.ஏ. ஆங்கிலப் பிரிவில் 10, பி.எஸ்சி கணினி அறிவியலில் ஒரு இடம், பி.எஸ்சி வேதியலில் ஒரு இடம் என மொத்தம் 49 காலியாக உள்ளன.

இந்த காலியிடங்களுக்கான மூன்றாம்கட்ட கலந்தாய்வு செப்டம்பா் 13,14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. மேலும் இது குறித்த விவரங்கள் கல்லூரி இணையதளத்திலும், கல்லூரி அறிவிப்பு பலகையிலும் வெளியிடப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com