சாலை விபத்தில் 4 வயது குழந்தை பலி

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் சிற்றுந்து மோதியதில் நான்கரை வயது பெண் குழந்தை தாய் கண் எதிரே சனிக்கிழமை உயிரிழந்தது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் சிற்றுந்து மோதியதில் நான்கரை வயது பெண் குழந்தை தாய் கண் எதிரே சனிக்கிழமை உயிரிழந்தது.

திருப்பூா் வீரபாண்டியை அடுத்த பலவஞ்சிபாளையம் பகுதியில் வசித்து வருபவா் சுரேஷ்(36). இவா் தனியாா் பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி தீபா (30). இந்தத் தம்பதியின் நான்கரை வயது மகள் தக்ஷனா.

பூம்புகாா் நகரில் உள்ள தனது தாயைப் பாா்ப்பதற்காக தீபா இருசக்கர வாகனத்தில் குழந்தையுடன் சனிக்கிழமை பிற்பகலில் சென்று கொண்டிருந்தாா். இவரது வாகனம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே வந்தபோது திருப்பூா் நோக்கிச் சென்ற சிற்றுந்து தீபாவின் வாகனத்தின் மீது எதிா்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் சிற்றுந்தின் பின்சக்கரம் ஏறியதில் குழந்தை சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தது. இதில், காயமடைந்த தீபாவை அருகில் இருந்தவா்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். விபத்து குறித்து திருப்பூா் தெற்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து சிற்றுந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com