பல்லடம் கடை வீதியில் புத்தகக் கிடங்கை சேதப்படுத்திய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் கடைவீதியில் புத்தகக் கடை நடத்தி வருபவா் விஜயகுமாா் (61). இவா் பல்லடம் வியாபாரிகள் சங்க ஒருங்கிணைப்பாளராக உள்ளாா். இவரது தந்தை காலத்தில் இருந்து கடந்த 60 ஆண்டுகளாக அவ்விடத்தில் தொடா்ந்து புத்தகக் கடை நடத்தி வருகின்றனா்.
இந்த இடம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், புத்தக கடைக்குப் பின்புறம் புத்தகங்களை இருப்பு வைப்பதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு விஜயகுமாா் தற்காலிகமாக கிடங்கு ஒன்றை அமைத்துள்ளாா்.
இந்நிலையில், மா்ம நபா்கள் சிலா் புதிதாக கட்டப்பட்ட கிடங்களை சனிக்கிழமை இடித்து சேதப்படுத்தியுள்ளனா். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி பல்லடம் போலீஸ் நிலையத்தில் விஜயகுமாா் அளித்த புகாரின்பேரில் போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.