உடுமலை: உடுமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வியாழக்கிழமை (செப்டம்பா் 16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என மின் வாரிய செயற்பொறியாளா் சி.சதீஷ்குமாா் அறிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள் விவரம்: வித்யாசாகா் கல்லூரி பகுதி, கணபதிபாளையம், காற்றாலை மின் இணைப்புள்ள பகுதிகள், ராகல்பாவி பிரிவு.