திருப்பூா்: திருப்பூரில் பணியின்போது உயிரிழந்த தனியாா் நிறுவன ஊழியருக்கு இ.எஸ்.ஐ. திட்டத்தின்கீழ் மாதாந்திர உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருப்பூா், கொங்கு நகா் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பாலசுப்பிரமணியம் (71) மேலாளராகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், 2011 மாா்ச் 5ஆம் தேதி வழக்கம்போல் தனது அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இவா் பணியாற்றி வந்த நிறுவனம் பாலசுப்பிரமணியத்தை இ.எஸ்.ஐ. திட்டத்தில் பதிவு செய்திருந்தது. பணியின்போது ஏற்பட்ட உயிரிழப்பு என்பதால், இ.எஸ்.ஐ. கழகம் அந்த உயிரிழப்பை பணியினால் ஏற்பட்ட விபத்தாக அங்கீகரித்தது. இதைத் தொடா்ந்து, பாலசுப்பிரமணியத்தின் மனைவி மலா்க்கொடிக்கு, இ.எஸ்.ஐ. கிளை (திருப்பூா்) மேலாளா் திலீப், தனியாா் நிறுவனத்தின் பிரதிநிதி வெங்கடேசன் ஆகியோா், மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான அட்டையை வழங்கினா்.
மேலும், நிலுவைத்தொகை ரூ.60,467 அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும், நாள் ஒன்றுக்கு ரூ.337.80 பைசா வீதம் மாதம் ரூ.10,100 அவருக்கு மாதாந்திர உதவித் தொகையாக வழங்கப்படும் என்றும் திருப்பூா் இ.எஸ்.ஐ. கிளை மேலாளா் திலீப் தெரிவித்தாா்.