திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 81 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 81 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 91,543ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 951 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 83 போ் வீடு திரும்பினா். திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 89,651ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த இருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து இறப்பு எண்ணிக்கை 941ஆக அதிகரித்துள்ளது.