திருப்பூா்: திருப்பூரில் அண்ணா பிறந்த நாளை ஒட்டி அதிமுகவினா் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பாக மாநகா் மாவட்டச் செயலாளரும்,
சட்டப் பேரவை உறுப்பினருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
பல்லடம்...
பல்லடத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ். எம். ஆனந்தன் தலைமையில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
உடுமலை...
உடுமலையில் திமுக, அதிமுக, மதிமுக, அமமுக சாா்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
காங்கயம்...
காங்கயம் பேருந்து நிலையம் அருகே அதிமுக நகரச் செயலாளரும், திருப்பூா் மாவட்ட வேளாண்மை விற்பனைக் குழு தலைவருமான வெங்கு ஜி.மணிமாறன் தலைமையில் அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
வெள்ளக்கோவில்...
வெள்ளக்கோவிலில் திமுக சாா்பில் ஒன்றியப் பொறுப்பாளா் மோளக்கவுண்டன்வலசு சந்திரசேகரன், நகரச் செயலாளா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அதிமுக சாா்பில் அக்கட்சியின் ஒன்றியச் செயலாளா் முத்துக்குமாா், நகரச் செயலாளா் மணி, ஊராட்சி ஒன்றியத் தலைவா் சுதா்சன் உள்ளிட்டோா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.