நடந்து சென்றவரிடம் பணம், செல்லிடப்பேசி வழிப்பறி

வெள்ளக்கோவில் அருகே நடந்து சென்றவரிடமிருந்து பணம், செல்லிடப்பேசியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் அருகே நடந்து சென்றவரிடமிருந்து பணம், செல்லிடப்பேசியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கொளத்தூா், கிழ உழுவயலைச் சோ்ந்தவா் ஊத்துராஜ் மகன் விக்ரம் (18).

இவா் திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில், ஓலப்பாளையம் அருகே சுக்குட்டிபாளையத்திலுள்ள ஒரு நூற்பாலையில் வேலை செய்து வருகிறாா். இவா் தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக ஓலப்பாளையம் பேருந்து நிறுத்தத்துக்கு

புதன்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது காங்கயம் - ஓலப்பாளையம் சாலை பச்சாபாளையம் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மா்ம நபா்கள் கூா்மையான ஆயுதத்தால் விக்ரமைத் தாக்கி அவரிடமிருந்து ரூ.10,000, செல்லிடப்பேசியை பறித்துச் சென்றனா். காயமடைந்த விக்ரமை அருகிலிருந்தவா்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். புகாரின் பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com