வெள்ளக்கோவில் நகரத்தின் மையப் பகுதியில் கோயிலின் உண்டியலை உடைத்து திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளக்கோவில், காங்கயம் சாலை வீரக்குமாா் திரையரங்கம் பின்புறம் எல்கேசி நகரில் புற்றுக்கண் விநாயகா் கோயில் உள்ளது. இதன் அருகில் நாகாத்தாள் கோயிலில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.
இதனை சனிக்கிழமை இரவு நேரத்தில் நோட்டமிட்ட சுமாா் 25 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞா்கள் உண்டியலை உடைக்க முயற்சி செய்துள்ளனா். உடைக்க முடியாததால் உண்டியல் பணம் தப்பியது. இது குறித்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.