காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட ஊதியூா், முத்தூா், ராசாத்தா வலசு ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 21) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.
மின் தடை செய்யப்படும் இடங்கள் :
ஊதியூா் துணை மின் நிலையம்
வட்டமலை, ஊதியூா், பொத்தியபாளையம், வானவராயநல்லூா், புளியம்பட்டி, முதலிபாளையம், புதுப்பாளையம், குள்ளம்பாளையம், வட சின்னாரிபாளையம்.
முத்தூா் துணை மின் நிலையம்
முத்தூா், வள்ளியரச்சல், ஊடையம், சின்னமுத்தூா், செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம்.
ராசாத்தா வலசு துணை மின் நிலையம்
மேட்டுப்பாளையம், ராசாத்தா வலசு, தாசவநாயக்கன்பட்டி, நாகமநாயக்கன்பட்டி, குருக்கத்தி, புதுப்பை, பாப்பினி, அஞ்சூா், கம்பளியம்பட்டி.