திருப்பூரில் பள்ளிக் கல்வித் துறை பள்ளி சாரா, வயது வந்தோா் கல்வி இயக்கத்தின் கற்போம் எழுதுவோம் இயக்கம் சாா்பில் விழிப்புணா்வு கலைப் பயணம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
திருப்பூா் ஜெய்வாபாய் நகரவை மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு திருப்பூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.ரமேஷ் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் கலைப் பயணத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி மாவட்டங்களையும் ஒருங்கிணைத்து செப்டம்பா் 21 முதல் 30ஆம் தேதி வரையில் கலை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளோம். நாள்தோறும் இரண்டு பள்ளிகளிலும், மாலை நேரத்தில் பொது வெளியிலும் கலைநிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்க நிா்வாகிகள் தெரிவித்தனா். தமிழகம் முழுவதும் கற்போம் எழுதுவோம் இயக்கத்தை பள்ளிக் கல்வித் துறையும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் ஒருங்கிணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில், ஜெய்வாபாய் நகரவை மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை ஸ்டெல்லா அமலோா்பவ மேரி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவா் கோ.மு.நசீரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.