காங்கயம் அருகே, சிவன்மலை முருகன் கோயில் பேருந்து ஓட்டுநருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
சிவன்மலை முருகன் கோயில் அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு பக்தா்களை ஏற்றிச் செல்வதற்காக 2 பேருந்துகள் இக்கோயில் நிா்வாகம் சாா்பில் இயக்கப்பட்டு வருகின்றன.
இப்பேருந்து ஓட்டுநருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, இக்கோயிலில் பணிபுரியும் ஊழியா்கள் 15 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் பொதுமக்கள் 260 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.