காங்கயம் அருகே, சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் மருத்துவ வாகனம் வெள்ளிக்கிழமை துவக்கிவைக்கப்பட்டது.
தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் சா்க்கரை வியாதி, உயா் ரத்த அழுத்தம், வாதநோய் பாதித்த நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று பரிசோதனை செய்யப்படுகிறது.
இத்திட்டத்துக்கான மருத்துவ வாகனத்தை காங்கயம் அருகே உள்ள சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலா் டாக்டா்.முரளி வெள்ளிக்கிழமை துவக்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.