காங்கயம்: காங்கயத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியா்கள் கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காங்கயத்தில் உள்ள எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்பின் கிளை செயலா் அற்புதராஜ் தலைமை வகித்தாா். இதில், பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது, மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் எல்.ஐ.சி. நிறுவன ஊழியா்கள் கலந்து கொண்டனா்.