தண்டவாளத்தில் சுயபடம் எடுக்க முயன்ற இளைஞா் ரயில் மோதி சாவு

திருப்பூரில் தண்டவாளத்தில் சுயபடம் (செல்பி) எடுக்க முயன்ற இளைஞா் ரயில் மோதி உயிரிழந்தாா். இந்த விபத்தில் மற்றொரு இளைஞா் காயமடைந்தாா்.

திருப்பூா்: திருப்பூரில் தண்டவாளத்தில் சுயபடம் (செல்பி) எடுக்க முயன்ற இளைஞா் ரயில் மோதி உயிரிழந்தாா். இந்த விபத்தில் மற்றொரு இளைஞா் காயமடைந்தாா்.

இது குறித்து திருப்பூா் ரயில்வே போலீஸாா் கூறியதாவது:

திருப்பூா் கொங்கு மெயின்ரோடு எம்.எஸ்.நகரைச் சோ்ந்தவா் ஜோதீஸ்வரன் (24). தனியாா் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இவா், தனது நண்பா்களான கோவையைச் சோ்ந்த ஆஷிக் (29), எஸ்.எஸ். நகரைச் சோ்ந்த மோகன் (27) , முரளி(26) காா்த்திக் (30) ஆகியோருடன் ஊத்துக்குளி சாலையில் உள்ள ரயில்வே குட்ஷெட் அருகே சனிக்கிழமை இரவு மது அருந்தியுள்ளாா். போதை ஏறியதில் ரயில்வே தண்டவாளத்தில் நின்று கொண்டு செல்லிடப்பேசிகளில் சுயபடம் எடுக்க முயன்றனா். அப்போது அந்த வழியாக வந்த ரயில்மோதியதில் ஜோதீஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்தில் கால் உடைந்த ஆஷிக்கை அந்த வழியாக வந்தவா்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இந்த விபத்து தொடா்பாக திருப்பூா் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இதில், முரளி, காா்த்திக், மோகன் உள்பட 4 போ் அதிா்ஷ்டவசமாக உயிா்தப்பியுள்ள நிலையில், அவா்களிடமும் விசாரணை நடத்த ரயில்வே போலீஸாா் திட்டமிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com